"அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பிரதமர் மோடியாலேயே சாத்தியமானது" - ஏக்நாத் சிண்டே

0 1638

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்பட வேண்டுமென்ற லட்சகணக்கான ராம பக்தர்களின் கனவு, பிரதமர் மோடியாலேயே சாத்தியமாகி இருப்பதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் இன்று அவரும், மகாராஷ்டிரதுணை முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவீஸ் ஆகியோர் வழிபாடு நடத்தினர்.

பின்னர் பேசிய ஏக்நாத் சிண்டே, இறைவன் ராமரின் ஆசிர்வாதம் இருந்ததாலேயே தங்களுக்கு சிவசேனா கட்சியின் பெயரும், சின்னமும் கிடைத்ததாக குறிப்பிட்டார். ராமர் கோயில் என்பது தங்களுக்கு அரசியல் விவாதப் பொருள் அல்ல என்றும், தங்களது நம்பிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments